16th May 2020 23:31:37 Hours
அன்மையில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள், பதுள்ளையிலுள்ள 112 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை வியாழக்கிழமை 14 ஆம் திகதி மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கொஸ்தா அவர்கள், 112 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் ஜி.ஏ.பி.பி எதிரிசிங்க அவர்களினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொர்ந்து அவர் தனது விஜயத்தின் ஞாபகர்த்தமாக படைத் தலைமையக வளாகத்தினுள் மரக்கன்று ஒன்றினையும் நட்டார்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி தனது விஜயத்தை நிறைவு செய்துவிட்டு வரும் வழியில் முதியாங்கனய மற்றும் மஹியங்கன பௌத்த விஹாரைகளுக்கு சென்று வழபாடுகளில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Best Sneakers | Zapatillas de running Nike - Mujer