Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2024 12:03:01 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 18 டிசம்பர் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நியமனம் பெற்ற தளபதி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் சம்பிரதாயமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுப்பேற்றார். நிகழ்வின் நினைவாக குழுப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.