Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2023 21:43:57 Hours

பொறியியல் சேவை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவி ஏற்பு

இராணுவத் தலைமையகத்தின் பொறியியலாளர் சேவை பணிப்பகத்தில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 17) இடம்பெற்ற நிகழ்வின் போது பொறியியல் சேவைப் படையணியின் பிரிகேடியர் ஈஎடிகே எதிரிசிங்க அவர்கள் பொறியியல் சேவை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்களுக்கு பதிலாக இப் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஈஏடிகே எதிரிசிங்க அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதியாக பணியாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பொறியியல் சேவை பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.