Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2024 21:08:58 Hours

பொறியியல் சேவை பணிப்பகத்தினால் தொழிலாண்மை மேம்பாட்டு பட்டறை

பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வை.கே.எஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். இலங்கை இராணுவ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து 2024 டிசம்பர் 4 ஆம் திகதி பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் ஒரு தொழிலாண்மை மேம்பாட்டுப் பட்டறையை நடாத்தியது. ஊவா-குடா ஓயாவில் கொமாண்டோக்களின் நம்பிக்கை பாய்ச்சல் அரங்கத் திட்டத்தைத் திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் நிர்மாணித்தல் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொண்ட சவால்கள் மற்றும் பாடங்கள் குறித்து இந்த செயலமர்வு கவனம் செலுத்தியது.

முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் கலந்துரையாடல் மூலம் முப்படைகளின் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த செயலமர்வு எடுத்துரைத்தது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 140 க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். பொறியியல் சேவைகள் படையணியின் நிபுணர்கள் ஊடாடும் அமர்வை நடத்தினர்.