Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2023 22:10:22 Hours

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 6 மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் பொது மக்களுக்கு உதவி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் வசிக்கும் வருமானம் குறைந்த 5 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் இனிப்பு வகைகளையும் வழங்கினார். அதற்கமைய வியாழக்கிழமை (13) 682 வது காலாட் பிரிகேட் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரின் பெருந்தன்மைக்கு தங்களின் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

682 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் படையினரால் தங்களின் நிதியுதவியுடன் அவர்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் உணவு பொதிகள் படையினரால் வீட்டு வாசலுக்குச் சென்று அவர்களுக்கு வழங்கியதுடன் ஒவ்வொறு பொதியும் ரூ. 5000/= பெறுமதியாகும்

இதேவேளை, 681 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் புத்தாண்டை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 10 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இனிப்பு வகைகளுடன் கூடிய 10 உலர் உணவுப் பொதிகளை வழங்கினர். அவர்களது வீடுகளுக்குச் சென்று அந்த நிவாரணப் பொதிகளை வழங்கினர்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

6 மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள் முழு திட்டத்தையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட்டனர்.

இத் திட்டத்தில் 68 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சி மற்றும் பிரிகேட் தளபதிகள் இத் திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.