Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2019 21:01:15 Hours

புதிய 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி உத்தியோக பூர்வ விஜயம்

மேஜர் ஜெனரல் A.I மாரசிங்க அவர்கள் 22 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்பு திருகோணமலையில் அமைந்துள்ள ஜயசுமனராம விகாரையின் விகாராதிபதி திருக்குணாமலைய ஞானகீர்த்தி தேரர் அவர்களை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் திருமலை மாவட்ட ஆயர் கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் , திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு N.A.A. புஸ்பகுமார மற்றும் திருமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு சுதத் நாஹாமுல்ல அவர்களை இம் மாதம் (8) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அத்துடன் திருமலையில் அமைந்துள்ள இந்து புராதான ஆலயமான கோனேஸ்வரம் கோயிலுக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டார். Sneakers Store | nike air max 95 obsidian university blue book list