24th February 2021 11:00:06 Hours
இராணுவத்தின் கொமாண்டோ படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ திங்கட்கிழமை (22) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது தளபதியாக பொறுப்பேற்றார்.
புதிய தளபதியை பதவி நிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் 12 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது..
பின்னர், மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் புதிய பதவியை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் முதல் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டார். பின்னர் நிகழ்வின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்துபசாரம் மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையாற்றல் என்பன இடம்பெற்றன. முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அணிநடையின் பார்வையாளர்களாக பங்குபற்றினர்.
மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, இந்நியமனத்திற்கு முன்னதாக 68 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.
புதிதாக நியமனம்பெற்ற தளபதி, மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க ஓய்வு பெறுவதையிட்டு இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். latest Running | シューズ