01st June 2020 22:45:58 Hours
பதவி நிலை பிரதானியாக 1 ஆம் திகதி காலை புதிதாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடனான முதல் சந்திப்பு இராணுவ தலைமையக தளபதி காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது புதிய பதவி நிலை பிரதானிக்கு வாழ்துக்களை தெரிவித்தார்.
இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அவரின் புதிய நியமனத்திற்கும் எதிர்கால பணிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகேக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்க விடயம்.
இதன் போது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்கால சவால்களுடன் பொருந்தக்கூடிய வகையில் இராணுவத்தை மாற்றுவதன் அவசியம், நிறுவனத்தின் தொழில்சார் மேம்பாடு ,படையினரின் நலன்புரி வகிப்பங்கு மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர்.
தன் மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையில் இவ் உயர் பதவிக்கு தன்னை நியமித்தமைக்காக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இந் நியமனத்திற்கு முன்பு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியாக பதவி வகித்தவர். Nike Sneakers Store | Nike Shoes