22nd August 2023 21:50:52 Hours
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை திங்கட்கிழமை (ஓகஸ்ட் 21) காங்கேசன்துறை 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு மேற்கொண்டார்.
4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எல்எஸ்கே ஜயதிஸ்ஸ மற்றும் 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அனைத்து அதிகாரிகளாளும் வரவேற்கப்பட்டார், பின்னர் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்ககையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், அனைவரையும் மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் பேணுமாறு வலியுறுத்தி உரையாற்றியதுடன், குழு படம் எடுத்து கொண்ட அவர், வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார்.
அவர் 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில் அனைத்து நிலையினருடனும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.