Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2022 15:50:09 Hours

புதிதாக பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு கௌரவிப்பு

இராணுவத் தளபதியிடமிருந்து புதிய பதவி முத்திரைகளைப் பெற்றுக் கொண்ட மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்களுக்கு கொழும்பு இலங்கை மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர் தலைமையகத்தில் 13 ஒக்டோபர் 2022 அன்று இராணுவ மரபுகளின்படி கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.

மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர் சிப்பாய்கள் நுழைவாயிலில் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கி அவரை கௌரவித்தனர்.

அனைத்து படையினருக்குமான உரை ஆற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்கள் அன்றைய நாள் நிகழ்வுகளின் முடிவில் அனைத்து படையினரின்ன் தேநீரில் உபசரிப்பிலும் கலந்து கொண்டார்.

இந்த பாராட்டு விழாவில் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.