Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2024 18:59:12 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இலங்கை சிங்க படையணில் பாராட்டு

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்து மால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றதை தொடர்ந்து, 15 டிசம்பர் 2024 அன்று அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணியில் தலைமையகத்தில் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்த, இலங்கை சிங்க படையணியின் உயிர்நீத்த அதிகாரிகள் மற்றும் படையினரை கௌரவிக்கும் வகையில் போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி அனைத்து நிலையினருக்குமான தேநீரில் விருந்தில் கலந்து கொண்டதுடன் அனைவருடன் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

அதிகாரிகள் உணவகத்தில் சிறப்பு மதிய உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அவரது தகுதியான நிலை உயர்வை பாராட்டி நினைவு சின்னத்தை வழங்கினார்.