17th August 2023 20:53:06 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியாகவும்இலங்கை சமிக்ஞை படையணியில் படைதளபதியாகவும் பதவியேற்றனை தொடர்ந்து மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியு அவர்கள் 2023 ஓகஸ்ட் 8 ஆம் திகதி பலாலி வயாவிலானில் உள்ள 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
3 வது இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் யுஎல்சிடி பெரேரா அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயத்தின் நினைவாக தளபதி அவர்கள் வளாகத்தில் மா மரக்கன்றினை நட்டதுடன் தொடர்ந்து படையினருக்கான உரையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் நிர்வாக விடயங்கள் மற்றும் கடமைகளின் சுமூகமான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான தனது நோக்கத்தினை விளக்கினார்.
அதைத் தொடர்ந்துதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் பிரிவின் நிர்வாக விடயங்கள் குறித்து படைத்தளபதிக்கு கட்டளை அதிகாரி முறையான விளக்கமளித்தார்.
இந்த விஜயத்தின்போது இலங்கை சமிக்ஞைப் படையணி பிரதி நிலைய தளபதி மற்றும் பிரதான சமிக்ஞை அதிகாரியின் அலுவலகத்தின் கேணல் ஒருங்கிணைப்பு ஆகியோரும் கலந்துகொண்டனர்.