25th March 2024 15:26:00 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 19 மார்ச் 2024 அன்று 12 வது இராணுவ சமிக்ஞை படையணிக்கு (இணைய பாதுகாப்பு) விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த படைத் தளபதியை 12 வது இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி கேணல் டபிள்யூ.ஆர்.எம்.ஆர் விக்கிரமசிங்க யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். மேலும் தற்போதைய செயல்பாடுகள், நிர்வாகம், வழங்கல் மற்றும் பயிற்சி போன்றவை தொடர்பாக கட்டளை அதிகாரி விரிவான விளக்கம் வழங்கினார்.
விளக்கத்தைத் தொடர்ந்து, பிரதம சமிக்ஞை அதிகாரி படையினருக்கு உரையாற்றினார் பின்னர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தின் போது அனைவருடனும் கலந்துரையாடினார். தொடர்ந்து குழுப்படமும் எடுத்துக் கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரி தனது உரையின் போது, படையணி படையினரின் எதிர்கால வளர்ச்சிக்கான தனது பார்வையை தெளிவுப்படுத்தினார்.
இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.