Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2022 16:41:59 Hours

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நாடு முழுவதும் உள்ள படையினருக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புப் படைத் தலைமையகங்களுக்கு விஜயத்தை மேற்கொண்ட அவர் 2022 ஒக்டோபர் 15 ஆம் திகதி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதானியை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் வரவேற்றார்.

நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடலுடன் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத்த தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கை இராணுவத்தின் 23 வது இராணுவ தளபதியாகவும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு தேசிய திட்டங்கள் மற்றும் பல்வேறு முயற்சிகளை நிறைவேற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களின் அர்ப்பணிப்புகள், கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் தடுப்பதற்காக பங்களித்த அனைத்து படையினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், அவர் உரையாற்றுகையில் நாடு முழுதும் உள்ள அனைத்து படையினர்களும் தொழில்ரீதியாகவும் பொறுப்புடனும் கடமைகளை நிறைவேற்றுவது எதிர்பாராத நிகழ்வுகளைக் குறைத்து, பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குழு புகைப்படத்தின் பின்னர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக விருந்தினர் புத்தகத்தில் அவர் தனது பாராட்டுக்களை பதிவிட்டார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனைத்து படைப்பிரிவுகளின் தளபதிகள், வட மத்திய முன்னரங்க பாதுகாப்பு பகுதியின் தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.