Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2022 20:27:47 Hours

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி முதலாம் படையணிக்கு விஜயம்

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (14) கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு வருகை தந்த அவரை, முதலாம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் அவரை வரவேற்றதுடன், அவருக்கு 3 வது கஜபா படையணி சிப்பாய்களால் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அன்றைய விஜயத்தின் போது, முதலாம் படையணியின் கீழ் உள்ள படையணித் தளபதிகள், முதலாம் படையணியின் பதவி நிலை அதிகாரிகள் ஆகியோர் அவருடன் குழுப் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டதுடன், தலைமையக வளாகத்தில் மரக்கன்றினை நடும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் கிளிநொச்சியில் உள்ள 'நெலும் பியச'வில் முதலாம் படையணியின் படையினரிடம் உரையாற்றிய அவர், பல்வேறு செயற்பாடுகள் மற்றும் கொவிட் 19 தொற்று நோய்க்கு எதிரான பணியில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து படையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறும் முன், வரவேற்பாளர் புத்தகத்தில் தனது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் மற்றும் எண்ணங்களையும் எழுதினார்.

53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத், 58 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே, முதலாம் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.