03rd June 2023 00:12:24 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் பிரிகேடியர் ஏஎம்கேஜிபீஎஸ் அபேசிங்க அவர்கள், பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் 16 வது பணிப்பாளராக வியாழன் (மே 22) இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பணிப்பகத்தின் பல அதிகாரிகள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு அவரது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்று கொண்டார்.
பிரிகேடியர் ஆர்பீஎஸ் பத்மசாந்த எல்எஸ்சி அவர்கள் இப்போது ஓய்வு பெறுவதற்கான விடுமுறையில் உள்ள நிலையில் அவருக்கு பதிலாக இவர் இந்நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.