Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2021 15:27:32 Hours

பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றார்

இராணுவ தலைமையகத்தின் பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் 15 வது பணிப்பாளராக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள பிரிகேடியர் சாலிய பிரேமவன்ச திங்கட்கிழமை (9) அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத வழிபாடுகளை தொடர்ந்து பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார். இவர் இதற்கு முன்பாக இராணுவ நலன்புரி நிதியத்தின் பணிப்பாளராக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பணிப்பகத்தின் அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்ததுடன் இப்புதிய பணிப்பாளரின் நியமனத்திற்கு முன்னதாக மேற்படி நியமனத்தை பிரிகேடியர் சாணக்க மெத்தானந்த வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.