Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2022 15:46:43 Hours

பலாலி இராணுவ வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை கூடம் மற்றும் சமையல் அறை திறப்பு

யாழ்.பலாலியில் அமைந்துள்ள இராணுவத் தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘பிரணாம’ சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் சமையல் அறை என்பன யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தலைமையில் செவ்வாய்க்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

பலாலியில் உள்ள இராணுவ தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் லஹிரு ரத்னவீர, புதிய சத்திரசிகிச்சை கூடம் மற்றும் சமையலறைப் பிரிவு ஆகிய இரண்டின் சாவிகளையும் அன்றைய பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார். வைத்தியசாலையில் உள்ள சுகாதார வசதிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அவ் வசதி கூடங்கள் அவசரமாக தேவைப்பட்டதுடன் இது தொடர்பாக யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் முயற்சியால் அப் புதிய கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி பிரிகேடியர் கிளிஃபோர்ட் சொய்சா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 5 வது பொறியியலாளர் சேவைப் படையணியினரால் இத்திட்டத்திற்கான மனிதவள உதவி வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இந்த நாளின் தொடக்க நிகழ்வுகளுடன் இணைந்திருந்தனர்.