Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பலபிட்டியவில் நடைபெற்ற இராணுவ நீச்சல் சம்பியன்ஷிப் போட்டி

நீச்சல் போட்டியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட 2கிலோ மீற்றர் திறந்த நிச்சல் சம்பியன்ஷிப் போட்டியானது, கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை பலபிட்டிய கடற்கரையில் இடம்பெற்றன. இப்போட்டியில் இராணுவ நீச்சல் போட்டியாளர்கள் சம்பியன்ஷிப்பை சுவிகரித்துக் கொண்டனர். இரண்டு நாட்களாக இடம் பெற்ற ஆண்களுக்கான இத் திறந்த சம்பியன்ஷிப் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட இராணுவம்,கடற்படை,பொலிஸ் மற்றும் நாடுபூரகவும் உள்ள அனைத்து விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசாலை விளையாட்டு அணிகளைசேர்ந்த 25 அணிகள் போட்டியிட்டன.

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டியில் இராணுவ நீச்சல் வீரர்கள், 61 புள்ளிகளைப் பெற்ற போட்டி அணிக்கு எதிராக 154 புள்ளிகளைப் பெற்றனர். அதன்படி கடற்படை மற்றும் பொலிஸ் நீச்சல் போட்டியாளர்கள் 39 மற்றும் 37 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

அதற்கமைய இராணுவ நீச்சல் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்ரசேகர அவர்களின் ஆசிர்வாதத்தில் 52 ஆண் நீச்சல் வீரர்களும் 6 மகளிர் நீச்சல் வீராங்கனைகளும் இப் போட்டியில் பங்கேற்றனர்.

இப் போட்டியில்(தனி நபருக்கான) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சாதாரன வீரர் பி.டி செஹான் அவர்கள் முதலாம் இடத்தைபெற்று தங்க பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டார். Running sports | FASHION NEWS