Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2020 23:36:25 Hours

பரசூட் பயிற்சி கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்ட 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி

53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் நிக்கவெவ பரசூட் பயிற்சி கல்லூரிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை வெள்ளிக்கிழமை 15 மேற்கொண்டார்.

தனது விஜயத்தின் போது , பரசூட் பயிற்சி கல்லூரியில் ரப்லிங் கோபுரம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினை சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நாட்டி வைத்தார். அதன் பின்னர் கல்லூரியின் வளாகத்தில் 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் கட்டுமாணப் பணிகளில் உள்ள 100 மீட்டர் தூர துப்பாக்கி சூட்டு இலக்கினை பார்வையிட்டதோடு, புதிதாக படையினருக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுமுறை விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அனைத்து நிர்மாணத் திட்டங்களும் பரசூட் பயிற்சி கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மேஜர் பி.ஜி.ஆர் கம்லத்கே அவர்கள் பரசூட் பயிற்சி பிரிகேட் தளபதி கேணல் டி.என்.ஜே பெனாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்பார்வை செய்தார்.

இந்நிகழ்வில் பல சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். bridge media | UK Trainer News & Releases