20th May 2020 21:28:11 Hours
முப்படையின் படை வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை அங்கீகரிப்பதாக அவர்களுக்கு உயர் மரியாதை செலுத்தும் முகமாக தேசிய படை வீரர்கள் தினத்தில் (19) இரு கரையோர பாதை ரயில்களில் பயணித்த பயணிகள் உயிர்த்த மற்றும் காயமடைந்த படையினருக்கு அஞ்சலியையும் நன்றியுணர்வினையும் வெளிப்படுத்தினர். இதற்காக ரயில் வண்டிகளை தேசியக் கொடிகளால் அலங்கரித்து தேசிய கீதம் பாடி தேசபக்தர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தியிருந்தனர்.
காலை 7.10 மணிக்கு பானதுறையிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் ரயில் பயணிகளும், மாலை 4.50 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரையிலான ரயில் பயணிகளும் சமூக இடைவெளியை தக்க வைத்துக் கொண்டு நிகழ்வில் பங்குபற்றிருந்தனர் அந்த பயணிகளில் பெரும்பாலானோர், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இணைந்து நிகழ்வை நிகழ்த்தினர். தற்போது கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதில் படையினரின் வகிப்பங்கையும் பாராட்டி பேசினர். Nike air jordan Sneakers | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf