Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2022 16:50:04 Hours

பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியிடமிருந்து அதிகார சின்னத்தை பெறுகிறார்

இராணுவத்தின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற மேலும் ஒரு சிரேஷ்ட பிரிகேடியர் இன்று (5) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்ததோடு தளபதி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறப்புப் படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க WWV RWP RSP, இவ்வாறு தளபதியின் அலுவலகத்தில் இராணுவத் தளபதியிடமிருந்து ஜெனரலின் வாளைப் பெற்றுக்கொண்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குறித்த சிரேஷ்ட அதிகாரி மதிப்புமிக்க இரண்டு நட்சத்திர தரத்திற்கு உயர்த்தப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தேசத்திற்கு விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காக மூத்த அதிகாரியைப் பாராட்டினார்.