14th November 2019 17:33:07 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் M.D விஜயசுந்தர அவர்களது பதவியுயர்வின் நிமித்தம் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவருக்கு படைப் பிரிவு தலைமையகத்தினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (14) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Mysneakers | Nike Shoes