19th May 2020 15:00:52 Hours
இராணுவ தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு (மே 19) ஆம் திகதி மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்ட இராணுவத்தின் ஐந்து சிரேஷ்ட பிரிகேடியர்களுக்கானபுதிய பதவியுயர்வின் அடையாளமானது இன்று (19) ஆம் காலை பாதுகாப்புதலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமானலெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் ஸ்ரீ ஜயவர்தனபுராவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தின் இராணுவ தளபதி அலுவலகத்தில் அணிவித்து வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவ போர்கருவி படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க, இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியைசேர்ந்த மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, விசேட படையணியைசேர்ந்தமேஜர் ஜெனரல் ஹரேந்ர ரணசிங்க, கெமுனு ஹேவா படையணியைசேர்ந்தமேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ மற்றும் இலேசாயுத காலாட் படையணியைசேர்ந்த மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய ஆகியசிரேஷ்ட அதிகாரிகள் அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டதுடன், மேலும் 172 அதிகாரிகள் பிரிகேடியர்தரத்திற்கும்,லெப்டினன் கேணல், மேஜர் மற்றும் லெப்டினன்ட் தரத்திற்கும், மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய போர் வீரர்கள் தினத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஒத்துழைகப்புடன் பதவியுயர்த்தப்பட்டனர்.
கடந்த ஆண்டுகளில் இராணுவத்திற்கு ஒரு மதிப்புமிக்க சேவையை வழங்கிய இந்த ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளுக்குமான பதவி உயர்வு அடையாளத்தினை அணிவித்த பின்னர், லெப்டினன் ஜெனரல் சில்வா அந்த அதிகாரிகளுக்கு கேண், மற்றும் வாள்களை நினைவு பரிசுகளாக வழங்கினார் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். Best Authentic Sneakers | Air Jordan