07th January 2023 22:22:48 Hours
ஹேமாஸ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஷிரோமி மாசகோரள அவர்களின் அனுசரணையினால், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 611 வது காலாட் பிரிகேடின் ஒருங்கிணைப்பின் மூலம் கேகாலை புனித மேரிஸ் தமிழ்க் கல்லூரியில் கல்வி கற்கும் 50 ஏழை மாணவர்களுக்குப் பெருமளவிலான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வு வியாழக்கிழமை (5) புனித மரியாள் தமிழ்க் கல்லூரி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின்படி, 611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ எரகொட மற்றும் 8 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இத்திட்டத்தை நெருக்கமாகக் கண்காணித்து நடைமுறைப்படுத்தினர்.
ஒவ்வொரு பொதியிலும் அப்பியாச புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் சொக்ஸ் உடன் ஜோடி அணிகலன்கள் இருந்தன.
இந் நிகழ்வில் 611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ எரகொட, பனாகொடவில் உள்ள ‘விருகேகுலு’ முன்பள்ளியின் பொறுப்பதிகாரி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.