Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2021 23:25:46 Hours

படையினரின் செயற்பாடுகளில் பசுமையாகின்றது கண்ணகி அம்மன் கோவில் வளாகம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 591 வது பிரிகேட் படையினர் புத்தாண்டில் தொழில் ஆரம்பிக்கும் சுபவேளையில் புதன்கிழமை (15) வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் மரம் நடும் திட்டத்தை மேற்கொண்டனர்.

மருதம், கொன்றை, இழுப்பை, நாகம் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான மரக்கன்றுகள் கோயில் குருக்களுடன் கலந்தாலோசித்து வளாகத்தில் நடப்பட்டன.

எவலோன் பிரைவேட் லிமிடெட் வழங்கிய உபகரணங்களின் ஆதரவுடன் 12 இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் 14 இலங்கை சிங்கப் படை படையினர் தேவையான வகையில் நிலத்தை தயார்ப்படுத்தினர்.

59 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் பி. டி. சூரியபண்டார மற்றும் 591 வது பிரிகேட் தளபதி கர்ணல் சுஜீவ பெரேரா ஆகியோரின் மேற்பார்வையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.