Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2021 12:30:31 Hours

படையினரால் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 படைப்பிரிவின் சிப்பாய்களால் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் திங்கட்கிழமை (24) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்களின் பணிப்புக்கமைவான இப்பணிகளில் 591 வது பிரிகேட் மற்றும் 12 இலங்கை இலேசாயுத காலாட் படை சிப்பாய்கள் பங்குபற்றினர்.