04th May 2023 18:52:48 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் படையினர், மண்டுவில் பிள்ளையார் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர். இத்திட்டத்தை 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, 682 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூடபிள்யூகே ரோஹன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோவில்' அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நன்மதிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒரு அதிகாரியும் 8 சிப்பாய்களும் பொதுமக்களுடன் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.