29th October 2019 10:10:32 Hours
கும்பல்வெல – எல்ல பிரதான வீதி மற்றும் ஹப்புத்தளை பிரதேசத்தில் வீதிகளில் இடையூறுகள் விளைவிக்கும் வித த்திலிருந்த கற்பாறைகள், மரங்கள் மற்றும் மண் மேடுகள். படையினரது பங்களிப்புடன் அகற்றப்பட்டன.
இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11, 112 படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 112 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 25 படையினரது பங்களிப்புடன் இந்த அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பதுளை பிரதான வீதியில் உள்ள ஹபுதளை சந்தியில் (27) ஆம் திகதி இடம்பெற்ற போக்குவரத்து இடையூறுகள் படையினரது பங்களிப்புடன் அகற்றி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . latest Nike Sneakers | Men’s shoes