Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2017 15:34:13 Hours

படையினரால் புல்மோட்டையில் குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மானிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் தாளகல தியான மையத்தின் அனுசரனையுடன் புல்மோட்டை விருஜயபுரா கிராமத்தில் வசித்து வரும் நபருக்கு புதிய வீடொன்று கட்டி வீடு பாரமளிக்கும் நிகழ்வு (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இராணுவத்தின் 62, 622 படைத் தலைமையகங்கள் மற்றும் 27 ஆவது படையணியின் ஒத்துழைப்புடன் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டது.

இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட இந்த வீடுகளை தளகல சுமணரத்ன நாயக தேரர் அவர்கள் இந்த வீட்டு உரிமையாளருக்கு பாரமளித்தார். இந்த நிகழ்விற்கு 62 ஆவது படைத் தளபதி எல்.ஏ.என்.எஸ் வனசிங்க, 622 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் எம்.பி கருணாரத்ன , கிராம வாசிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

url clone | Nike News