Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2021 12:27:56 Hours

படையினரால் தங்கள் வளங்களைக் கொண்டு தேவையுடைய குடும்பத்திற்கு வீடு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேடின் 10 வது கஜபா படையணியின் படையினர் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் பண்டாரவளை, பன்வில பகுதியில் வசிக்கும் மேலும் ஒரு வறிய குடும்பத்திற்காக நிர்மாணித்த புதிய வீட்டை 23 ஒக்டோபர் 2021 அன்று பயனாளிகளிடம் கையளித்தனர்.

இந்த வீடு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 11 வது படைப்பிரிவின் தளபதி, 111 பிரிகேட் தளபதி, 10 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு பண்டாரவளை பன்வில பிரதேச செயலகத்தின் பெத்தேகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமையில் வாழ்ந்து வந்த திருமதி சார்லட் வெலரத்னவுக்காக நிர்மாணிக்கப்பட்டது.