29th November 2022 21:52:13 Hours
கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைபிரிவின், 241 வது காலாட் பிரிகேடின் 18 வது விஜயபாகு காலாட் படையணி, 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணியின் படையினர்கள் மற்றும் திருக்கோவில் விசேட அதிரடிப்படை பொலிஸாருடன் இணைந்து நவம்பர் 24 ம் திகதி நிந்தவூரில் மறைவான இடத்தில் உப்பு மற்றும் பிளாஸ்டிக் கூறுகளை கலக்கும் இடம் ஒன்றினை மற்றுகையிட்டதுடன் ஒரு தொகை சட்ட விரோத உரத்தினையும் கைப்பற்றினர்.
இவ்வாறு இரசாயன மாசு கலந்த 40 தொன் உரம், சட்டவிரோத உரம் தயாரித்த ஆறு சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.