Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2017 15:26:24 Hours

படையினரால் மீண்டுமோர் சமூக சேவை முன்னெடுப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டதின் கீழ் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழ்விடத்தைக் கொண்ட குடும்பத்தாரிற்கு புதிய வீடு அமைத்து வழங்கப்பட்டது.

அந்த வகையில் யாழ்பாண பெரியவிளான் பிரதேசத்தில் வசிக்கின்ற திரு ஆரியவாதன் காவியன்பிள்ளை என்பவரிற்கே இப் புதிய வீடானது யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் தலைமையில் 513ஆம் படைத் தலைமையகத்தின் 14ஆவது கெமுனு ஹேவா படையணியின் படைவீரர்களின் ஒத்துழைப்போடு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் இராணுவத்தின் கேர்ணல் சந்தன மாரசிங்க எனும் அதிகாரியின் அவுஸ்த்திரேலியாவில் வசிக்கும் சகோதரர் அவர்களால் இவ் வீட்டு கட்டுமானப் பணிகளுக்கான முதலீட்டு அனுசரனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான அனுசரனையை வழங்கிய நபர் தமது தந்தையின் மூன்றாண்டு நினைவாண்டை முன்னிட்டே வழங்கப்பட்டதாகும்.

அந்த வகையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த புதிய வீட்டை திறந்து வைக்கும் நிகழ்வு மத வழிபாடுகளுடன் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இவ் வீட்டிற்கான திறப்பை யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்கள் வழங்கியதுடன் 51ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா , 513ஆவது படைப் பிரிவின் அதிகாரியான பிரிகேடியர் சந்தன ரணவீர அத்துடன் மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

latest jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online