Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற படகோட்ட போட்டிகள்

இராணுவ படையணிகளுக்கு இடையிலான 2019 ஆம் ஆண்டுகளுக்கான படகோட்ட போட்டிகள் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் தியவன்ன ஓயாவில் இம் மாதம் 22 – 23 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் இலங்கை பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, இலங்கை இலேசாயுத காலாட் படையணி, கஜபா படையணி, பொறிமுறை காலாட் படையணி, இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் இலங்கை பொலிஸ் படையணியும் கலந்து கொண்டன.

இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த ஆண் பெண் அணியானது இந்த போட்டிகளில் சம்பியனாக திகழ்ந்து 5 தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டது. பெண்கள் அணியானது 2 வெ ள்ளிப் பதக்கங்களை ஒரு வெண்கல பதக்கங்களையும் பெற்றுக் கொண்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி, இராணுவ பொலிஸ் படையணியின் மகளிர் அணியினர் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிறைவு நிகழ்வில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் என்கே வடுகொடபிடிய மற்றும் தேசிய புலனாய்வு பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். latest jordan Sneakers | New Balance 991 Footwear