Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையிலான 2019 க்கான துப்பாக்கி சூட்டு போட்டி முடிவு

படையணிகளுக்கு இடையிலான 2019 க்கான துப்பாக்கி சூட்டு போட்டி முடிவுகள் மூன்று பிரிவுகளின் கீழ் படையணிகள் மற்றும் புதிய போட்டியளர்களின் பங்களிப்புடன் (23)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தியதலாவையில் இடம்பெற்றன. இந்த போட்டியில் பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு போட்டியில் 320 பிளஸ் போட்டியாளர்கள் போட்டியிட்டதுடன் ஓபன் சாம்பியன்ஷிப்பை கெமுனு ஹேவா படையணியினர் கைப்பற்றினர். இரண்டாம் இடத்தை கொமாண்டோ படையணி (2 வது இடம்) மற்றும் விசேட படையணியினர் (3 வது இடம்) இடத்தை பெற்றனர் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

ஓபன் பிரிவில், 20 அணிகள் போட்டியிட்டதுடன், புதியவர்கள் பிரிவில் 12 அணிகள் அனைத்தும் ஒன்றாக போட்டியிட்டன.

இதன் போது சேவை சாம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், இலங்கை இராணுவ சேவைப் படையினர் இரண்டாம் இடத்தையும், இலங்கை இராணுவப் பொலிஸ் படையினர் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

புதியவர்களின் சாம்பியன்ஷிப்பில் இலங்கை காலட் படையணியினர் வெற்றிப் பெற்றதுடன், இரண்டாம் இடத்தை விஜயபாகு காலாட்படை படையணியினர் மற்றும் கொமாண்டோ படையணியினர் பெற்றனர்.

திறந்த வகை சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் கெமுனு ஹேவா படையணியின் டபிள்யூ.பி.என். தம்மிக, சேவை வகை சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராக இராணுவப் பொலிஸ் படையணியின் எஸ்.பி.டி.எஸ். மஞ்சநாயக்க மற்றும் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராக பொறிமுறைப் கலாட் படையணியின் ஏ.ஜி.எஸ். உதயகுமார ஆகியோர்களும் பெற்றுக்கொண்டனர்.

இப் போட்டியில் பிரதம அதிதி அவர்களால் வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டு போட்டியில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்கள் சிறந்த வீரராக வென்றார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் பொது நிர்வாக பிரதாணி மேஜர் ஜெனரல் சுராஜ் பன்ஷஜய உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். jordan Sneakers | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth