31st December 2022 12:27:51 Hours
22, 23 மற்றும் 24 வது காலாட் படைபிரிவுகளின் ஐந்து அணிகளின் பங்கேற்புடன் 28 டிசம்பர் 2022 அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைப்பிரிவுகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டிகள் 3 வது பொறியியல் சேவைப் படையணி விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை 23 வது காலாட் படைப்பிரிவு அணி வென்றதுடன், இரண்டாம் இடத்தை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக அணி கைப்பற்றியது.
கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த அவர்கள் சிறப்பு அதிதியாக பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் 22 மற்றும் 23 வது காலாட் படையணிகள் மற்றும் இராணுவத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு போட்டியை நடத்துவதற்காக தனது ஆசிகளை வழங்கியிருந்தார்.