17th August 2023 20:49:02 Hours
62 வது காலாட் படைப்பிரிவு, திங்கட்கிழமை (ஓகஸ்ட் 14) அதன் வெளியேறும் படைப்பிரிவு தளபதியான மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு பிரியாவிடை விழாவை நடத்தியது.
வெளியேறும் 62 வது படைப்பிரிவின் தளபதி வந்திறங்கியபோது சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அவருக்கு இராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தியதுடன், நினைவு சின்னமாக தலைமையக அலுவலக வளாகத்தின் முன் குழுப்படமும் எடுத்துக் கொண்டனர்.
62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக படைப்பிரிவில் சேவையாற்றும் அனைத்து நிலையினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தின் போது படையினருடன் உரையாடியதுடன் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக இருந்து வெளியேறும் தளபதிக்கு அவரது உத்வேகம், வழிகாட்டுதல் மற்றும் முறையான கட்டளையைப் பாராட்டி அவருக்கு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.