26th April 2024 14:48:17 Hours
நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையானது, இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையக படையினருக்கு ‘தொற்றுநோய் அல்லாத நோய்கள்’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை 24 ஏப்ரல் 2024 அன்று நடத்தியது.
‘ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்று ஒருங்கிணைப்பு அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, தொற்றாத நோய்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து, புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்து படையினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. பிரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ்.எம் விஜேவர்தன யூஎஸ்பீ எம்பிபிஎஸ் எம்ஆர்சீபீ (இங்கிலாந்து) எப்ஆர்சீபீ (இங்கிலாந்து) , பிரவே கேணல் (வைத்தியர்) பி.எல் ரணசிங்க் கேஎஸ்பீ, மற்றும் மேஜர் ஏ.சீ.கே உடுகம ஆகியோர் அமர்வுகளை நடத்தினார்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 10 அதிகாரிகளும் 75 சிப்பாய்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.