09th November 2021 20:00:29 Hours
விஷேட படையணியின் பிரிகேடியர் நிஷ்யங்க ஏறியகம அவர்கள் கடந்த திங்கள் (1) திகதி இராணுவத் தலைமையகத்தில் உள்ள நலன்புரி பணிப்பகத்தின் 33 வது பணிப்பாளாராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வு மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் இடம் பெற்றதுடன், புதிதாக பதவி ஏற்ற பணிப்பாளர் தனது அலுவலகத்தில் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பாக்கிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளராக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் கனிஷ்க ஹேயந்துடுவ அவர்களுக்கு பதிலாக இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.
பிரிகேடியர் நிஷ்யங்க ஏறியகம இந்த புதிய நியமனத்திற்கு முன்னதாக விஷேட படையணியின் நிலையத் தளபதியாக பணியாற்றினார்.