Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 19:05:56 Hours

நன்கொடையாளர்களின் உதவியுடன் படையினரால் நிவாரண பொதிகள் விநியோகிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆவது படைப்பிரிவின் 231 வது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 4 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 100 நிவாரண பொதிகள் சனிக்கிழமை (10) பவக்கொடிக் கேணி மற்றும் ராஜதுறை பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன.

மேற்படி உலர் நிவாரண பொதிகளில் பருப்பு, அரிசி, பால் மா, கோதுமை மா, தானியங்கள், மசாலா போன்றவை அடங்கியிருந்தன. மேலும் குறித்த நிதியுதவி நன்கொடையாளர் ஒருவரால் வழங்கப்பட்டதுடன் இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளானது 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஜி.ஆர்.ஆர்.எல் ஜயசிங்க அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

4 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகளுடன் இணைந்து படையினரால் மேற்படி பொதிகள் உரிய சுகாதார விதிமுறைகளுக்கமைய வீடுகளுக்கேச் சென்று நேரடியாக விநியோகிப்பட்டது.

23 வது படைப்பிரிவின் படைத் தளபதி மற்றும் 231 பிரிகேட் தளபதி ஆகியோரின் முறையான அறிவுறுத்தல்களின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.