Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2023 17:53:46 Hours

தொம்பகொட பார்வையாளர்களுக்கு வில்வ பூ பானம் வழங்கல்

வெசாக் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணியின் தலைமையக படையினர், வெசாக் தினத்தன்று (மே 5) பிற்பகல் தொம்பகொட சந்தியில் வில்வ பூ பானம் வழங்கினர்.

இலங்கை இராணுவ போர் கருவிப் படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ போர் கருவிப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பெண்கள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.