Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2024 18:09:52 Hours

தொண்டர் படையணியின் 143வது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 01 ஏப்ரல் 2024 அன்று தொண்டர் படையணி தனது 143 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது.

தொண்டர் படையணி தளபதியினை முகாம் வளாகத்திற்கு தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டீகேஆர் சில்வா கேஏஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அங்கு அவருக்கு இலங்கை இராணுவ முன்னோடி படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

காலஞ்சென்ற கெப்டன் எஸ்டபிள்யூஎம்எஸ்யூ.அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவுத்தூபிக்கு தளபதி மற்றும் பிரதி தளபதி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், தொண்டர் படையணியின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் மதிய விருந்துபசாரம் நடைபெற்றது.

விழாவையொட்டி, ந்தசெவன முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் 28 மார்ச் 2024 அன்று ஒரு செத்பிரித் பாராயணமும் இடம்பெற்றது.

ஆண்டு விழா நிகழ்வுகளில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.