Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2024 18:28:46 Hours

தேவையுடைய குடும்பத்தின் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டல்

சேருவிலவில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றுக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 12 மே 2024 அன்று நடைபெற்றது.

222 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் கலாநிதி பூஜா ஷகூர் அவர்கள், சேருவில ராஜ மகா விகாரையின் பிரதமகுருவான வண. அலுதெனிய சுபோதி தேரர் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் நிர்மாணிக்கப்படுவதற்கு நிதி அனுசரணையை வழங்கினார்.

இந்நிகழ்வில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந் நிகழ்வில் 9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி,அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.