இலங்கை மேசைப் பந்து சங்க கிலாஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற தேசிய மேசைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டின் பலபாகங்களைச் சேர்ந்த விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 200 க்கும் மேற்பட்ட மேசைப் பந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் வருடத்திற்கான இறுதிப் போட்டியில் விஜயபாகு காலாட் படையணியின் சார்ஜென்ட் ஈ.எஸ்.ஆர் பெர்னாண்டோ மற்றும் 14 வது இலங்கை பீரங்கி படையணியின் பொம்பொடியர் டபிள்யூ.எம்.சி உத்பால குமார ஆகியோர் இரட்டையர் பிரிவில் (35 வயதுக்குட்பட்ட) சம்பியன்களாக தெரிவாகினர்.
இராணுவ மேசைப்பந்து குழுவின் செயலாளர் கேணல் பி.விதானகே வினால் இராணுவ சாதனைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டன.
சாம்பியன் (35 வயது-இரட்டை)
சார்ஜென்ட் ஈ.எஸ்.ஆர் பெர்னாண்டோ (விஐஆர்)
பொம்பொடியர் டபல்யூ.எம்.சி உத்பால குமார (14 எஸ்எல்எ)
இரண்டாமிடம் (35 வயது-இரட்டை)
பதவி நிலை சார்ஜென்ட் எச்.எம்.எஸ்.ஆர் ஹேமந்த (18 வி.ஐ.ஆர்)
கோப்ரல் யூ.குணசேகர (18 வி.