Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2019 08:43:46 Hours

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தாக்குதலை நினைவு கூர்ந்து இரத்த தானம் வழங்கி வைப்பு

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தேசிய தௌஹீ ஜமாத் பயங்கரவாத அமைப்பினால் மேற்கொண்ட தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவு வளாகத்தினுள் படையினரால் இம் மாதம் (23) ஆம் திகதி இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலையில் உள்ள பிராந்திய இரத்த வங்கியின் ஆலோசகர் மாற்று மருத்துவருமான டொக்டர் திலூபா குணசேகர அவர்களது வேண்டுகோளை முன்னிட்டு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களது தலைமையில் இந்த இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவத்தினரது இந்த சேவைப் பணிகளை கௌரவித்து திருகோணமலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தினர் இராணுவத்தினருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தார்கள். . Sport media | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger