Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2024 15:25:48 Hours

"துருமிதுரு நவ ரட்டக்" திட்டத்தில் விவசாயத்திற்கு உதவி

'துருமித்துருநவ ரட்டக்' திட்டத்தின் கீழ் 7 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் விவசாயத்திற்கு பயனளிக்கும் 'இலுப்பை' மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சியை 2024 மார்ச் 20 அன்று 56 வது காலாட் படைப்பிரிவில் ஏற்பாடு செய்தனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது, படைப்பிரிவின் தளபதி விவசாயத்தின் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.