Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

துப்பாக்கி சூட்டு சம்பியன்ஷிப் 2019 – போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் வீராங்கனைகளினால் வெண்கல பதக்கம் சுவிகரிப்பு

பிலிப்பைன்ஸ்சில் 2019 நவம்பர் 10 - 18 ஆம் திகதி வரை இடம் பெற்ற மகளிர்களுக்கான ஒஸ்டலேசியா கைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப் - 2019’ போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பங்குபற்றி துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

மேலும் பிலிப்பைன்ஸ்சில் இடம் பெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 45 நாடுகளைச் பிரதி நிதித்துவப்படுத்தி 840 துப்பாக்கி சுடும் வீரர்கள் போட்டியிட்டனர்.

இப் போட்டியில் குழு முகாமையாளர் லெப்டினன்ட் கேர்ணல் எச்.கே.எல்.ஜே.பெரேரா அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவத்தின் 6 துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்றனர். இலங்கை இராணுவ 7 ஆவது மகளிர் படையணியின் லெப்டினன்ட் எல்.ஏ.எஸ்.எம் லியனராச்சி, இலங்கை இராணுவ 2 ஆவது மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.என் திவ்மிணி மற்றும் இலங்கை இராணுவ 5 ஆவது மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.கே கெளசல்யா ஆகியோர்கள் வென்கலப் பதக்கத்தை சுவிகரித்து கொண்டதுடன், சாஜன் கே.எம்.ஆர் ஜயந்த குமார மற்றும் கோப்ரல் டபிள்யு.கே.ஏ.பி பெனாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.best Running shoes brand | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ