Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2020 13:00:06 Hours

திருகோணமலை துருப்புக்கள் எப்போதாவது எழுகின்றன & அவசர நோயாளிகளுக்கு இரத்தத்தை கொடுங்கள்

வைத்தியசாலைகளின் அவசர நிலைகளில் நிலவும் ரத்த பற்றாக் குறையை கருத்தில் கொண்டு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 படைப்பிரிவின் திருகோணமலையிலுள்ள 6 வது இலங்கை படைக்கள சிறப்பணி தலைமையகத்தில் வியாழக்கிழமை 21 ம் திகதி 22ம் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் வழிக்காட்டலில் இரத்த தானம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இம் மனிதாபிமான செயற்பாடு திருகோணமலை பிராந்திய இரத்த வங்கியின் வைத்தி நிபுணர் டாக்டர் எம்.எஃப். சீனா சனூஸ் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இரத்தத்திற்கான அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

223 படைப்பிரிவின் 6 வது இலங்கை படைக்கள சிறப்பணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வில் 223 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சாந்தா பெரேரா மற்றும் 6 வது இலங்கை படைக்கள சிறப்பணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஹசந்த ஹென்னதி ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

திருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலையின் பணிப்பாளரும் உத்தியோகத்தர்களும் இராணுவத்தின் நன்கொடை உள்ளத்திற்கு நன்றி தெரிவித்தனர். buy footwear | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp