Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2021 17:44:50 Hours

திருகோணமலையில் வன மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பான வழிநடத்தல் குழு கூட்டம்

திருகோணமலை வன மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பு மாநாடு, திருகோணமலை மாகாண காணி ஆணையாளர் மற்றும் 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் 22 வது படைப்பிரிவு தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை (7) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 22 வது படைப்பிரிவின் தளபதி, சட்டவிரோத மணல் அகழ்வு, காடழிப்பு, காணி ஆக்கிரமிப்பு, புதையல் தோண்டுதல், தொல்பொருள் தளங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்காக்கப்பட்ட இடங்களில் அனுமதியின்றி நுழைதல் தொடர்பிலான கண்காணிப்பு அமைப்பின் முன்னேற்றங்கள் என்பன தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

221 வது பிரிகேட் தளபதி, 223 பிரிகேட் தளபதி, திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , திருகோணமலை மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி , வனவிலங்கு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் , தொல்பொருள் திணைக்கள உதவி பணிப்பாளர், மாவட்ட காணி ஆணையாளர், மற்றும் 22 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.