Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தாய்லாந்தில் இடம்பெற்ற ஓட்டப் போட்டிகளில் இராணுவ விளையாட்டு வீரர்கள் வெற்றி பதக்கங்கள்

2019 ஆம் ஆண்டிற்காக தாய்லாந்தில் இடம்பெற்ற திறந்த “ட்ரெக் என்ட் பீல்ட்” சம்பியன்சிப் ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவ படுத்தி இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை பெற்று எமது நாட்டிற்கு பெருமையை சேர்த்து தந்துள்ளனர்.

இந்த போட்டிகள் இம் மாதம் 15 – 21 ஆம் திகதி வரை பெங்கொக், தாய்லாந்து நகரில் இடம்பெற்றது. இதன் போது 3 ஆவது (தெண்டர்) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை ஜி ஏ எஸ் துலானி 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கு பற்றி தங்கப் பதக்கத்தையும், இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த போர் வீரர் ஆர் ஆர் டீ ரணதுங்க 110 மீற்றர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், போர் வீரர் எஸ் எல் எஸ் சில்வா முப்பாச்சல் போட்டிகளில் பங்கு பற்றி ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார். Nike Sneakers Store | Yeezy Boost 350 Trainers